இலங்கை

இலங்கை வந்த சீன போர்க்கப்பல் – தீவிரமாக கண்காணிக்கும் அவதானம்!

சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், கப்பலின் வருகை குறித்து இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அரிந்தம் பாக்சி, நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சீன கப்பலொன்று வருகை தந்துள்ளமை குறித்து ஊடகங்கள் வழியாக தாம் அறிந்ததாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதமும் சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content