இலங்கையில் ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

குடிநீர் கட்டண உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில் நடத்துவதற்காக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களுடைய ஹோட்டல்களில் நீர் நுகர்வு அதிகரிப்பால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக நிறைய பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த நிலைமைகளால் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும், இல்லையெனில் அவர்களின் வணிகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)