மின் உற்பத்திக்கு நீர் வழங்குவதில் சிக்கல்!

தற்போது நிலவும் மழையில்லாத காலநிலை காரணமாக சமனல குளத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஆனால் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அவசரமாக கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)