இலங்கை

இலங்கையில் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக வலுவான சட்டங்கள் தேவை என வலி்யுறுத்து!

பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் தமது பணியை உரியவாறு நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவாகிவரும் பொலிஸ் காவலில் கீழான உயிரிழப்புச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் அதேவேளை பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் உயிரிழப்புச் சம்பவங்கள் மீள நிகழாமலிருப்பதை உறுதிசெய்ய அவசியமான வழிக்காட்டல்களை தயாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல எனவும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குவதும்இ சட்டத்தை மீறுபவர்களை தண்டிப்பதும் அரசின் கடமை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!