Ukவில் 13 மாதக் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!! உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!
பிரித்தானியாவில் 37 வயதான ஜேமி வார்லி (Jamie Varley) என்ற உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர், 13 மாதக் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
13 மாதக் குழந்தையான பிரஸ்டன் டேவியை (Preston Davey) பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரஸ்டன் 09 மாதக் குழந்தையாக இருந்தபோது ஏப்ரல் 2023-ல் வார்லி மற்றும் மெக்கவன்-ஃபாசக்கர்லி (McGowan-Fazakerley) தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரஸ்டன் அவர்களின் பராமரிப்பில் இருந்த சுமார் நான்கு மாத காலத்தில், பாலியல் வன்கொடுமை மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி, 40 கடுமையான காயங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வார்லி அக்குழந்தையின் ஆபாசமான படங்களையும் காணொளிகளையும் எடுத்து விநியோகித்துள்ளார்.
இந்த வழக்கு பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 08 வாரங்களாக இடம்பெற்ற விசாரணையை தொடர்ந்து நடுவர் குழு அவர்களை குற்றவாளியாக அறிவித்ததுடன் வரும் வியாழக்கிழமை தண்டனை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.




