அமைதி ஒப்பந்தம்: உலக தலைவர்கள் மகிழ்ச்சி!
அமெரிக்கா மற்றும் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த உடன்படிக்கையானது பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்று ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடல்சார் வணிகப் போக்குவரத்து சீரடையும் என்றும், உலகப் பொருளாதாரச் சூழல் மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தும் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், இது சர்வதேசப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் ஒரு ஆக்கப்பூர்வமான செயலாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த உடன்பாட்டிற்கு தங்களது ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் பல உலக நாடுகள் அமைதியை நோக்கிய இந்த நகர்வை வரவேற்றுள்ளன.





