பல்லேகம தேரரின் இரத்த மாதிரியை பெற உத்தரவு!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்க வேண்டும்.
தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) அறிக்கையை அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.





