அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!
“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார்.
“தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள்.
கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் இன்று மாயமாகியுள்ளனர்.
கொழும்பில் அவர்கள AC அறையில் இருக்கிறார்கள் . மக்கள் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.” எனவும் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.





