செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை! பதற்றத்தை எதிர்கொள்ள தயார்!! ஹூதிகள் முழக்கம்!
செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், உறுதிப்படுத்தியுள்ளனர்.
“எங்கள் மக்கள் மீதான இந்த அநியாயமான முற்றுகையின் முன் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று அந்த அமைப்பு இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி அறிக்கையில், ஜாஃபா துறைமுக நகரில் உள்ள “இஸ்ரேலின் முக்கிய இலக்குகள்” மீது ஏவுகணைகளை வீசியதாகவும், அந்த ஏவுகணைகள் அதன் நோக்கங்களை அடைந்தது” என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் செங்கடலில் எதிரிகளின் கப்பல் போக்குவரத்திற்கு முழுமையான தடை விதிக்கிறோம், மேலும் எந்தவொரு சியோனிச இயக்கங்களும் எங்கள் படைகளின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.





