ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் கடற்படை, அணுசக்தித் தாக்குதல் திறன்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் உள்ள நேட்டோ கடல் பகுதிகளில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!