உலக இணையத்திலிருந்து தொடர்ந்து 82-வது நாளாவும் துண்டிக்கப்பட்டுள்ள ஈரான்
ஈரானில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான இணைய முடக்கம் இன்று 82 ஆவது நாளை எட்டியுள்ளது.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் (NetBlocks) இதனைத் தெரிவித்துள்ளது.
ஈரான் உலகளாவிய இணைய இணைப்பிலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் அரசு கட்டுப்படுத்தியது.
இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோதும், இதேபோன்ற இணைய முடக்கம் சுமார் 20 நாட்கள் அமுலில் இருந்தது.





