டிப்தீரியா நோய் பரவலால் திண்டாடும் ஆஸ்திரேலியா! 200இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஆஸ்திரேலியாவில் டிப்தீரியா (diphtheria) நோய் பரவலால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், குயின்ஸிலாந்திலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி விகிதங்களில் ஏற்பட்ட சரிவே இந்த நோய் பரவல் மீள் எழுச்சிக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பதிவான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால், தடுப்பூசி போடும் முறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
இதேவேளை நோய் பரவலை கட்டுப்படுத்த கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசாங்க ஆதரவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.




