உலகம் செய்தி

எபோலா வைரஸின் புதிய திரிபால் 120 பேர் உயிரிழப்பு!! தடுப்பு மருந்தும் இல்லை!!

எபோலா வைரஸின் ஒருவகையான புதிய திரிபான புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸால் காங்கோவில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பொதுவான எபோலா வகைகளைப் போலல்லாமல், இந்த புதிய  வைரஸுக்கு  குறிப்பிட்ட சிகிச்சைகளோ தடுப்பூசிகளோ இல்லை, இது தடுப்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயுற்ற அல்லது இறந்த நோயாளிகளின் உடல் திரவங்களுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பு மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகபட்ச ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஜைர் (Zaire) வைரஸை விட இது குறைவான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், புண்டிபுக்யோ வைரஸின் இறப்பு விகிதம் 30 சதவீதத்தை  தாண்டுகிறது. இதனால் ஆபத்தானதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!