ஐரோப்பா

பணிநிறுத்த நடவடிக்கை : லண்டன் ரயில் ஓட்டுநர்களின் புதிய தீர்மானம்!

லண்டன் சுரங்கபாதை ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்த நடவடிக்கையானது வரும் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய பணி அட்டவணைகள், சோர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை மேலும் ஆராய்வதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வரும் ஜூன் மாதம்  2 மற்றும் 4 ஆம் திகதிகளில் அடுத்தக்கட்ட வேலைநிறுத்தம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் நான்கு நாள் வேலை வார ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!