பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துங்கள் – மோடி அறிவுரை!
பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவதே தற்போதைய தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் மதிப்புமிக்க வளர்ச்சித் திட்டங்களை காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் . அது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரின் பாதகமான தாக்கத்தையும் குறைக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பிடித்துள்ளது. முதலில், இந்திய அரசு 100 சதவீத எல்பிஜி பயன்பாட்டில் கவனம் செலுத்தியது. இப்போது, குழாய் மூலம் எரிவாயுவை சிக்கனமாக வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
சிஎன்ஜி அடிப்படையிலான அமைப்பையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தின் காரணமாக, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருகிறது .
“ஆனால், இன்று பெட்ரோல், எரிவாயு, டீசல் போன்றவற்றை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரின் பாதகமான தாக்கத்தையும் குறைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.




