ஐரோப்பா

03 நாள் போர் நிறுத்தம் : 1000 கைதிகள் பரிமாற்றம்!!

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டத்தின்போது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தாது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரேனியப் படைகள் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தைத் தாக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆணையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மேற்படி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போர் நிறுத்தத்தையொட்டி இரு தரப்பில் இருந்தும் 1000 கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியின் 81வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரஷ்யாவில் வெற்றிதினக் கொண்டாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!