இலங்கை

அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் ஆரம்பம்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இன்று நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்துகிறது.

மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி என்ற கருப்பொருளின் கீழ் இவை நடைபெறுகின்றன.

நுவரெலியா மாவட்ட மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.

சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பு ஹென்றி பேத்ரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் தமது மே தினப் பேரணியை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வருட மே தினக் கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்தவுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியினர் தமது மே தினப் பேரணியை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!