All Ceylon Emergency Vehicle Service திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு!!
All Ceylon Emergency Vehicle Service இன் மாவட்ட இணைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (25) Nilaveli Royal Paradise விருந்தகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது இதுவரை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலையில் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை குளிப்பாட்டல் மற்றும் கபன் இடல் செய்வதற்கான மைய்யத் (Mayyath) வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திற்கான ஜனாஸா வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதுடன்,
இலங்கை முழுவதும் ஜனாஸா தேவைகள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம், அந்த ஜனாஸாக்களை அவர்களது வீடுகளுக்கு எந்த வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக கொண்டு சேர்ப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது All Ceylon ஜனாஸா சங்கத்தின் தலைவர் காதர் ஹாஜியார் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.





