காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்: 780 பேர் பலி!
போர் நிறுத்தத்துக்கு பிறகும் காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்தும் தாக்குதல்களால் இதுவரையில் 780 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.
காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அகதி முகாம்கள்மீதும் சிலவேளை தாக்குதல் இடம்பெறுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.





