மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை – இங்கிலாந்திற்கு பெரும் பாதிப்பு!
ஈரானிய சரக்குக் கப்பலான ‘தௌஸ்கா’வை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது.
இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 05 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 94.72 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை மீற முயன்றதற்காக ‘தௌஸ்கா’ கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க படைகள் தெரவித்துள்ளன.
இது அமைதி முயற்சிகளையும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நம்பிக்கையையும் பாதித்துள்ளது.





