லெபனான், இஸ்ரேலுக்கிடையில் அமைதி பேச்சு: Marco Rubio பங்கேற்பு!
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio யும் பங்கேற்கவுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், லெபனான் மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் பங்கேற்று, தெற்கு லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
பெருமளவான உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெபனான் அரச தரப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி பேச்சு நடத்தப்படவுள்ளது.
எனினும், இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இந்தச் சந்திப்பை ரத்து செய்யுமாறு லெபனான் அரசை வலியுறுத்தியுள்ளது.





