உலகம் செய்தி

அமைதி முயற்சி தொடர்கிறது: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்களைத் தணிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்புப் அமைதி பேச்சு எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடலுக்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் பிரதமர், அமைதியை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி தொடர்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீர்க்கப்படாத சிக்கல்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!