“ஈரானின் இதயம்”மீது அமெரிக்கா தாக்குத
ஈரான் கார்க் Kharg Island தீவிலுள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன என்று தெரியவருகின்றது.
சர்வதேச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
மேற்படி தாக்குதலில் ஈரானின் பொருளாதார மையமான எண்ணெய் கட்டமைப்புகளைப் பாதிக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாக விளங்கும் இத்தீவை முற்றிலுமாக அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
எனவே, தற்போதைய சூழலில், குறித்த தீவை கைப்பற்றுவதற்காக அமெரிக்கா தனது படையினரை அங்கு அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கை மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





