ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு
தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ், எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வழிகளை பாதுகாக்க, வொஷிங்டனுடன் இணைந்து பணியாற்றுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு சென்றுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், வியட்நாமில் டீசல் விலை மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அரசப் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.





