இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக சிறுவர்களுக்கு சருமத் தடிப்புகள் (Skin rashes) மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே, குழந்தைகளை ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது நீராடச்செய்யுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் மாணவர்கள் நீர்ச்சோர்வு மற்றும் வெப்பத்தாக்கத்திற்கு (Heatstroke) உள்ளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.

முறையான நீராகாரம் உட்கொள்ளாவிடில், இது உயிரிழப்பு போன்ற பாரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சிறுவர்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!