இஸ்ரேல் விடுத்த அவசர உத்தரவு
தெற்கு இஸ்ரேலின் ஆராட் (Arad) மற்றும் டிமோனா (Dimona) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் முழுவதும் இன்று மற்றும் நாளை நேரடி வகுப்புகளை இரத்து செய்வதாக அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆராட் மற்றும் டிமோனா பகுதிகளில் நடத்தப்பட்ட 2 ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக சமூகமளித்து கல்வி கற்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.





