இங்கிலாந்துக்கு, இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா
இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது.
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதுகின்றன.
மும்பையில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய, இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், சிவம் டூபே 49 ஓட்டங்களையும், இஷன் கிசன் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் மற்றும் ஆதில் ராசிட் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 254 என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




