பிணவறையில் இருந்த சடலத்தை தின்ற தெரு நாய்கள்: உறவுகள் போராட்டம்!
தெலுங்கானாவில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரச வைத்தியசாலையில் பிணவறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இளைஞரின் உறவினர்கள் உடலை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் தெலங்கானா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக 4 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





