(BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இப்போது இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேநேரம் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஈரான் உடனடியாக பதிலடி கொடுக்குமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பிராந்தியத்தில் பரவியுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் தளங்கள் எந்தவொரு பழிவாங்கலுக்கும் இலக்காக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அணுசக்தி செறிவூட்டல் சம்பந்தமாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. இது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுமாறு ட்ரம்ப் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரித்து வருகிறது.
இதற்கு ஏதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் கப்பல்களை குவித்துள்ளார். அத்துடன் சவுதி அரேபியாவில் இராணுவ தளத்தை நிறுவியுள்ளார்.
இதற்கிடையே ஒப்பந்தத்தை எட்ட ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது. அணுசக்தியை செறிவூட்ட தனக்கு உரிமை இருப்பதாக கூறி வருகிறது. அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையிலேயே சமீபத்திய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





