17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் Emmanuel Macron மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார்.
டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு AI உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.
இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு – 2026’ நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடிModi , பிரான்ஸ் ஜனாதிபதி மேம்ரான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.





