460 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 06 பேர் உயிரிழப்பு!
ரஷ்யா ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள் பறந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) இன்று அறிவித்துள்ளார்.
அதனால் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அனைத்து கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது எனவும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஆக்கிரமிப்பாளர் மீதான தடை அழுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆயுதங்களும் வான் பாதுகாப்பும் முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் உக்ரைனில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





