ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  குறைந்தது 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

போராட்டத்தின்போது இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” மற்றும் “பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் முதியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையை தடைசெய்யப்பட்ட அமைப்பாக அரசாங்கம் வகைப்படுத்தியுள்ளது, இதனால் அந்தக் குழுவிற்கு ஆதரவு வழங்குவது குற்றமாக கருதப்படும்.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!