கலவர பூமியாகியது பிக்பாஸ்… மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்
																																		அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு பிக்பாஸ் வீடு தற்பேோது இல்லை என்பதே உண்மை.
இந்த முறை தெரிவுசெய்யப்பட்டு இருக்கும் எவரும் பிகாபாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை. குடும்பத்துடன் இருந்து பார்க்கக்கூடியதாக இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் பிக்பாஸில் மட்டும் தான் அடிதடி ஏற்படாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் அதுவும் நடந்துவிட்டது.
பிகாபாஸில் இந்த வாரம் பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய 4 புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
புதிய போட்டியாளர்களுக்கும் , பழைய போட்டியாளர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பிரவீனுக்கும் மோதல் ஏற்படுகிறது.
கம்ருதீன், பிரவீனை அடிக்க முயல்கிறார். அப்போது பிரஜின் இருவரையும் தடுக்கிறார். திடீரென பிரஜினுக்கும், கம்ருதீனுக்கும் சண்டை நடக்கிறது.
பிரஜின் மனைவி ‘சாண்ட்ரா நீ ஏன் இப்படி பண்ற ‘ என்று அழுகிறார். பிக் பாஸ் வீடே கலவரமாகி இருக்கிறது.
        



                        
                            
