இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5,467 பேர் கைது!

2025 ஜனவரி முதல் இன்று வரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2025 ஜனவரி முதல் இதுவரையில் 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பரிசோதனைகள் ஊடாக களவு, துஷ்பிரயோகம்,மோசடி உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிடியாணை கைதுகளும், 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட திறந்த பிடியாணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துகளும் சட்ட நடவடிக்கை மூலம் அரசுடமையாக்கப்பட்டுவருகின்றன.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்