பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமியக் கட்சிக்கு தடை விதிப்பு
லாகூரில் (Lahore) நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் (Pakistan’s Tehreek-e-Labbaik) கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் தெஹ்ரீக்-இ-லப்பைக் கட்சி தடை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
“தெஹ்ரீக்-இ-லப்பைக் கட்சி பயங்கரவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது” என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-லப்பைக் கட்சியின் வன்முறை போராட்டங்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் மரணத்திற்கு வழிவகுத்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ம் தேதி, கட்சித் தலைவர் சாத் ரிஸ்வி தலைமையில் தெஹ்ரீக்-இ-லப்பைக் ஆதரவாளர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமெரிக்க மத்தியஸ்த போர் நிறுத்தத்தை எதிர்த்து கிழக்கு பஞ்சாப் நகரமான லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது போராட்டம் வன்முறையாக மாறியது.





