உலகம்

நைஜீரியாவில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி

நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டத்தில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு 80 பேரை ஏற்றி கொண்டு ஒரு படகு சென்றது.

அப்போது படகு அதிக சுமையுடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த படகு மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. தண்ணீரில் மூழ்கி அனைவரும் தத்தளித்தனர்.

தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!