அமெரிக்க கத்தோலிக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு – குழந்தைகள் உட்பட மூன்று பேர் மரணம்

அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் தேவாலயத்தில் காலை பிரார்த்தனையின் போது, குழந்தைகள் குழு மீது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் மினசோட்டா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடிய தாக்குதலில் காயமடைந்த 17 பேரில் 14 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் இருவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நகர காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை என்றும், ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
“இது அப்பாவி குழந்தைகள் மற்றும் வழிபடும் பிற மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்பட்ட வன்முறைச் செயல்” என்று மினியாபோலிஸ் காவல்துறைத் தலைவர் பிரையன் ஓ’ஹாரா ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் 20 வயதுடையவர் என்றும், அவருக்கு விரிவான குற்றவியல் வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.