இந்தியா

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ; மூவர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் மும்பை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாகவும் 25க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி புதன்கிழமை (ஆகஸ்ட் 27) திடீரென்று இடிந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதாகவும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 25க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது என்றும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

மும்பையில் பிள்ளையாளர் சதுர்த்தி பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். நேற்று பிள்ளையார் சதுர்த்தி என்பதால் மும்பை மாநகரம் களைகட்டியிருந்தது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்த அறிந்த மும்பைவாசிகள் சோகத்தில் மூழ்கினர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே