இந்தியா

இந்தியாவில் கிரிக்கெட் பந்திற்காக ஆசிரியர் ஒருவரை கத்தியால் தாக்கிய இளைஞன்

கிரிக்கெட் பந்துக்காக ஆசிரியர் ஒருவரை இளையர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பாகல்கோட்டெ மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13) இச்சம்பவம் நிகழ்ந்தது.

கிரிக்கெட் விளையாடியபோது பந்து அருகிலிருந்த ராமப்ப பூஜாரி என்பவருக்கு வீட்டிற்குள் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. 36 வயதான பூஜாரி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பந்தை எடுப்பதற்காக பவன் ஜாதவ் என்ற 21 வயது இளைஞன் பூஜாரியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, பந்து வீட்டிற்குள் விழவில்லை என்று அவரிடம் பூஜாரி சொன்னதாகக் கூறப்படுகிறது.

அதனையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது, பவன் பூஜாரியைத் தாக்கியதோடு, உடைந்த போத்தலாலும் கத்தியாலும் அவரைக் குத்தினார்.

இதனால், முகத்திலும் தலையிலும் காயமடைந்த பூஜாரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஆசிரியரைப் பவன் தாக்குவது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பவன்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதா, அவர் கைதுசெய்யப்பட்டாரா என்ற விவரம் தெரியவில்லை.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே