துருக்கியில் ஸ்கை ரிசார்ட்டில் தீ விபத்து : இருவர் பலி, சிலருக்கு மூச்சுத்திணறல்!

துருக்கியில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் சிக்கிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள பர்சா மாகாணத்தின் உலுடாக்கில் மூடப்பட்ட கெர்வன்சராய் ஹோட்டலில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. இது அவ் ஹோட்டலில் பதிவான இரண்டாவது தீ விபத்து சம்பவமாகும்.
தீயணைப்பு வீரர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும், இரண்டு மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அவர்களால் முழு கட்டிடத்தையும் காப்பாற்ற முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரதண்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)