பொழுதுபோக்கு

உலகையே திரும்பி பார்க்க வைத்த கும்பமேளா பேரழகிக்கு அடித்த அதிஷ்டம்…

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் மோனலிசா. பாசி மாலைகளை விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். இவர் உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பாசி, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றைத் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விற்று வந்தார்.

மோனலிசாவின் நீல நிற கண்கள் காண்போரை கவர்ந்தது. அவரை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு ரீல்ஸ்கள் பறந்தன. யூடியூபர் ஒருவரின் பேட்டியால் கும்பமேளாவில் வைரலானார் மோனலிசா.

மக்கள் அவரை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டாலும் தனக்குப் பிடித்தவர் சோனாக்ஷி சின்ஹா என்கிறார் அவர்.

மோனலிசாவின் அழகும், கண்களும் கண்காட்சிக்கு வரும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மோனலிசா படிக்கவில்லை. மாலைகளை விற்பதில் பெற்றோருக்கு உதவுகிறார். கும்பமேளாவில் வைரலான மோனலிசாவை சூழ்ந்துகொண்ட பலரும் புகைப்படங்களை எடுக்க டார்ச்சர் செய்தனர்.

ஒருகட்டத்தில் கண்ணீர்விட்ட அவர் தனது சொந்த ஊருக்கே திரும்பினார். யூடியூபர்கள் பலரும் எல்லை மீறினர். இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவால் மோனலிசாவின் வாழ்க்கை மாறப்போகிறது.

‘நியூஸ்18 ஹிந்தி’ உடனான சிறப்பு நேர்காணலில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவின் தோற்றம் மற்றும் அவரது அப்பாவித்தனம் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார். தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.

உண்மையில் இப்படி ஒரு பெண்ணைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் எனவும், தனது படத்தில் விவசாயி மகளாக அவரை நடிக்க வைக்க விரும்புவதாகவும் இயக்குநர் சனோஜ் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் மோனலிசாவை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் மோனலிசாவுக்கு நடிப்பு வகுப்பு எடுக்கப்போவதாகவும், நடிப்பு கலையை கற்றுக்கொடுப்பேன் எனவும் தெரிவித்தார். சனோஜ் மிஸ்ரா ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்திற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்த ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ திரைப்படம் மணிப்பூர் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவின் மூத்த சகோதரர் அமித் ராவ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!