ஆசியா செய்தி

விமானப் பயணத்தின்போது அதிகரிக்கும் திருட்டு – சிங்கப்பூர் விமான நிலைய பொலிஸார் எச்சரிக்கை

விமானப் பயணத்தின்போது திருட முனைவோருக்கு எதிராக சிங்கப்பூரின் விமான நிலைய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் உள்ள விமான நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, விமானத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து 120,000 வெள்ளிக்கு நிகரான தொகை களவாடப்பட்ட சம்பவமும் அதில் அடங்கும்.

அதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதில் உள்ள சட்டச்சிக்கல்கள் சவாலாய் இருப்பதாக ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் சுபாஸ் மேனன் (Subhas Menon) கூறினார்.

அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின்கீழ் விதிமுறைகள் இருந்தாலும் எல்லாச் சட்டத்துறைகளும் அதனைப் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி