ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் தீவிபத்து – பிரதமர் விடுத்த எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2 பேர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகிக்கிறது.

இன்று அதிகாலை அங்கு தீப்பற்றியதில் ஒருவர் காயமுற்றதுடன் வழிபாட்டுக் கட்டடம் கணிசமாகச் சேதமடைந்தது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி அந்தத் தாக்குதலைச் சாடினார். யூதர்களுக்கு எதிரான உணர்விற்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் காவல்துறைப் பிரிவு விசாரணை குறித்து விக்டோரியா மாநிலக் பொலிஸாரிடம் பேசும் என்று பிரதமர் அல்பனீசி குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலத்தினுள் தீ பரவ உதவும் பொருளை இருவர் காலையில் பயன்படுத்தியதை அங்குச் சென்ற ஒருவர் பார்த்திருக்கிறார்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் புலப்படவில்லை என்றும் அது கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படும் என்றும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித