செய்தி

மலேசியாவில் கார்மீது கொள்கலன் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள புக்கிட் தெங்காவில், ட்ரெய்லர் லொரி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த கொள்கலன் ஒன்று காரின்மீது விழுந்ததில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவர், 21 வயது லீ ஸி ரூ என்று அடையாளம் காணப்பட்டார்.

அந்த பெண் போக்குவரத்து விளக்கில் காத்திருந்தபோது, எதிர்புறத்திலிருந்து வந்த லாரி திடீரென இடது பக்கம் திரும்பியது.இதன் காரணமாக, கொள்கலன் மாதின் கார்மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் காரில் தனியாக இருந்தார் என்றும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தினால், சாலைகளின் இரு தடங்களும் தற்காலிமாகத் தடைப்பட்டன.மற்ற சில வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்த மற்றோர் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததற்கு முன்னரே, காயமடைந்த ஓட்டுநரை வழிப்போக்கர்கள் மீட்டனர்.மலேசியக் காவல்துறை சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்துகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!