இலங்கை

இலங்கையில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு – ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர புள்ளைர் சந்தியில் இன்று அதிகாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் ஸ்ரீபுரா பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவுந்திஸ்ஸபுர, ஸ்ரீபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 34 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்