பொழுதுபோக்கு

வயநாடு மக்களுக்காக கோடிகளை வாரி வழங்கிய பிரபாஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போயின. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டது.

இன்னும் நிறைய பேர் மண்ணுள் புதைந்து இருப்பதாக கூறப்படுவதால் தேடுதல் பணி ஒரு வாரத்தைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவவும், அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாரிவழங்கி வருகின்றனர்.

தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் தன் பங்கிற்கு பெரும் தொகையை நிவாரண நிதியாக கொடுத்திருக்கிறார்.

அவர் ரூ.2 கோடியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ பெரும் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ள நடிகர் பிரபாஸுக்கு பாராடுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content