இலங்கை செய்தி

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – தாயாரின் கொடூர செயல்

புலத்கொஹுபிட்டிய கிரிபோருவ தோட்ட கிராமத்தில் நேற்று (17) கிணற்றில் சடலமாக மிதந்த நான்கு வயது மற்றும் 10 மாத சிறுமியின் மரணம் கொலையே எனவும் சிறுமியின் தாயாரே கொலையாளி எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ருவன்வெல்ல பொலிஸாரின் விசாரணைத் தகவல்களின்படி,  குறித்த சிறுமியை தாயே  கிணற்றில் வீசி கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதாகவும், முன்பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டு, கடந்த 16ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் தனது தாயுடன் உறங்கியதாகவும் சிறுமியின் பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுநாள் சிறுமியும் அவரது தாயாரும் வீட்டில் இல்லை என்பது குடியிருப்பாளர்களுக்குத் தெரியவந்துள்ளது.

நேற்று (17) குற்றம் இடம்பெற்ற தோட்டத்திற்கு அருகில் உள்ள மரண வீடொன்றில் இருந்து வந்த சிலர், வெறிச்சோடிய கிணற்றுக்கு அருகில் தாயார் கிடப்பதைக் கண்டு, கிணற்றின் ஓரத்தில் குழந்தையின் சடலம் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

பின்னர் அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் தாயை சிகிச்சைக்காக கரவனெல்ல மருத்துவமனையில் அந்த குழுவினர் அனுமதித்தனர். இது தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இரவு 11 மணிக்கும், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாய் பேச்சுத் திறனற்ற பெண் எனவும், அவர் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content