ஆசியா செய்தி

லாகூரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அரசியல் ஆலோசகர் குலாம் ஷபீர் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக லாகூரின் காயன்பான்-இ-அமின் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இஸ்லாமாபாத் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற நிலையில் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் அவரது மகன் பிலால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது.

குலாம் ஷபீர் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான ஷபாஸ் கில்லின் மூத்த சகோதரர் ஆவார்.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி