இலங்கை

கடந்த ஆண்டு 24 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் 24 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (SLHRC) தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை அடிக்கடி பதிவாகி வருவதாகவும், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான பொலிஸாருக்கு எதிராக SLHRC க்கு 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 44 யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content