இலங்கை

இலங்கையில் பொலிஸாரிடம் சரணடைந்து தண்டனை கோரும் இளம் பிக்கு!

யக்கல பிரதேசத்தில் இளம் பிக்கு ஒருவர் பொலிஸாரிடம் தன்னை கைது செய்து தண்டனை வழங்கமாறு கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவர் தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி நேற்று தனது தாயுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பொலிஸாரினால் இளம் பிக்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்த திருட்டுக் குற்றச் செயல்களுக்காக தனக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தனக்கு தண்டனை கிடைக்கும் வரையில் தான் தியான நிலையில் ஈடுபடுவதற்கு மனநிம்மதி இல்லை என அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, தனக்கு தண்டனை கிடைத்து மன அமைதி பெற வேண்டும் என்பதற்காகவே இவர் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content